எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய சிறார் நூல் வரிசை படைப்புகளுள் ஒன்று கயிறு.
சமகால சிக்கல்களை சிறு குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். சாமி கயிறு சாதிக் கயிறாக மாறி பூசப்படும் சாதி வண்ணத்தை தனது சிறார் எழுத்தில் காட்டியுள்ளார் சரவணன்.
இந்தப் புத்தகம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக மலிவு விலைப் பதிப்பாக நூலின் விலை ஐந்து ரூபாய்க்கு பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறார்கள்.
Add your first comment to this post