திருப்பதியில் ஷாருக்கான்: நயன்தாராவுடன்  சாமி தரிசனம்!

நகர்வு

Sharuk Khan In Tirupathi

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானைத் தனது மகள் சுஹானா கானுடன் தரிசித்தார் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான். அவருடன் நடிகை நயன்தாராவும் சாமி தரிசனம் செய்தார். செப்டம்பர் 7

வியாழக்கிழமை “ஜவான்” படம் வெளியாக உள்ள நிலையில் அதில் நாயகன் – நாயகியாக நடித்துள்ள ஷாருக்கான் மற்றும் நயன்தாரா திருப்பதி சென்றார்கள்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

இப்படத்தின் முன்னோட்டம் – ப்ரீவியூ சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை அண்மையில் படக்குழுவினர்  வெளியிட்டார்கள்.

ஷாருக்கான் ரசிகர்கள்  இந்தப் படத்தை மிகவும் ஆர்வத்தோடு  எதிர்பார்க்கிறார்கள். 

கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த “பதான்” திரைப்படம் வசூலை அள்ளியது என்பது கவனிக்கத்தக்கது. 

இந்தநிலையில் இஸ்லாமியரான ஷாருக்கானும், கிறிஸ்தவரான நயன்தாராவும் திருப்பதி கோவிலுக்குச் சென்ற சம்பவம் இந்தியாவின் மத நல்லிணக்க சூழலைப் பிரதிபலிப்பதாக சினிமா ரசிகர்கள் பெருமிதத்தோடு பேசிவருகிறார்கள். 

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page