அரை நிலா

நகர்வு

பாதச் சுவடுகளிலிருந்து 

பாய்ந்து வானேகும்  அருவி

அஞ்சறைப் பெட்டியில் அசையுமொரு சர்ப்பம்.

இந் நிலையிலா மார்கழிக் காமம்

நீரடித் தாவரமோ

கூழாங்கல்லோ.

அனைத்தும் சிதறிக் கூடுகையில் 

அணைந்தெரிகிறது கிழக்கில் 

அரை நிலா.

உமாமகேஸ்வரி கவிதைகள்

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page