கவிதைகள் – கணேசகுமாரன்

நகர்வு

ம்

அத்தனை மிகச்சிறிய சொல்தான்
இத்தனை மிகப்பெரிய துயர் துடைத்து
ம் என்றது
*

ஒருநாள் முந்தியோ
பிந்தியோ பூத்துவிட்ட
கர்வமும் வருத்தமும் இன்றி
அன்றைக்குச் சிரிக்கிறது
செவ்வந்தி.
*

நிம்மதியாக இருக்கும் பொருட்டு
ஒரு காதலைத் துறந்தான்
ஒரு துரோகம் புரிந்தான்
ஒரு புன்னகை கொன்றான்
நிம்மதியாக இருந்ததைக் குறித்தும்
*

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page