தேநீரில் ஏடு

நகர்வு

கீறிய பொம்மையையும் ப்ரியம் 

மாறாது அணைத்துறங்கும் 

குழந்தையிடம்தான்

கற்றேன்போல.

விரிசலென்று ஒன்றுமில்லை;

ஒன்றுமில்லையென்று ஒன்றுமில்லை .

வேறொரு கிளை

பிறிதொரு நிலை

இன்னொரு திசை

மார்க்கம் நிர்பந்தமற்ற மழை

கசப்பேறாத கனவு

தேநீரில் ஏடு படிகிறது…

நாளை நாளைதானே?

உமாமகேஸ்வரி கவிதைகள்

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page