1986 ல் எழுதி 2023 ல் வெளிவரும் புத்தகம். வரும் 20-08-2023 ஞாயிறு அன்று காலை பத்து மணி அளவில் தஞ்சாவூரில் உள்ள பெசன்ட் அரங்கத்தில் தமிழ் இலக்கிய முன்னோடி தோழர் கே. டானியல் மரணத் தருவாயில் எழுதி முடித்த சாநிழல் குறுநாவல் வெளியீடு மற்றும் நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற உள்ளது.
1986 ம் ஆண்டு தோழர் டானியல் அவர்கள் இலங்கையில் இருந்து சிகிச்சைக்காக தஞ்சையில் தங்கி இருந்தபோது சிகிச்சைக்கு மத்தியில் அவர் மருத்துவமனையில் இறந்தார். அப்போது எழுதப்பட்ட நாவல் இப்போதுதான் புத்தகமாக வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாடு அமைத்திருக்கிறார்கள்.
Add your first comment to this post