இயக்குநராகப் புதிய அவதாரம் எடுக்கிறார் எழுத்தாளர் அஜயன் பாலா  

நகர்வு

Ajayan Bala News

சென்னை: ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’ உள்ளிட்ட படங்களில் பங்காற்றியுள்ள எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குநராகப் புதிய அவதாரம் எடுக்கிறார். 

அவர் இயக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கின. படத்திற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. 

அஜயன் பாலா கடந்த 20 வருடங்களாகத் தமிழ்த்திரை உலகில் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, நடிகர் என்று பன்முக ஆற்றலோடு இயங்கிவந்தவர்.  

இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் ‘கன்னிமாடம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். ‘கோலிசோடா 2’ படப் புகழ் கிரிஷா குருப் கதாநாயகியாக நடிக்கிறார். 

யோகி பாபு, முனீஷ்காந்த் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சித்துகுமார் இசையமைக்கிறார். 

மலைப்பகுதியில் நிகழும் காதல் கதையே இந்தப் படம் என்கிறார்கள். அஜயன் பாலாவின் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்புகள் வருகிற செப்டம்பர் மாதம் முதல் தேதி தொடங்குகிறதாம்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page