சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300 – க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிய எடிட்டர் ஆர்.விட்டல் ஜூலை 26 அன்று தனது 91 வது வயதில் காலமானார்.
படத்தொகுப்பாளராக மட்டுமல்லாமல் ஜெய்சங்கர் நடித்த ‘முடிசூடா மன்னன்’, ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’, ஏவிஎம் ராஜன் நடித்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ போன்ற படங்களையும் விட்டல் இயக்கியிருக்கிறார்.
தமிழில் கமல், ரஜினியின் ‘ஆடு புலி ஆட்டம்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘படிக்காதவன்’, ‘முரட்டுக்காளை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘பாயும் புலி’, ‘விக்ரம்’, ‘ராஜா சின்ன ரோஜா’ உள்ளிட்ட ஏராளமான சினிமாக்களில் படத்தொகுப்பாளராக பங்களித்திருக்கிறார்.
ஏ.வி.எம். மின் ஆஸ்தான படத்தொகுப்பாளர் ஆர்விட்டல்தான். எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில்மட்டும் 71 படங்களுக்கு அவர்தான் எடிட்டர். அதேபோல சிவாஜி நடித்த 18 படங்களுக்கு அவர் எடிட்டர்.
எடிட்டர் ஆர்.விட்டலின் மகளின் பராமரிப்பில் வசித்துவந்த அவரின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றார்கள்.
Add your first comment to this post