நாளை மாலை 6 மணி அளவில் சென்னையில் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள டயா பார்ட்டி ஹாலில் மு. து. பிரபாகரன் எழுதிய அடையாற்றுக்கரை நாவல் வெளியிடப்படுகிறது.
திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் நூலை வெளியிட கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். சமூக ஆய்வாளர் கெளதம சன்னா, திரைப்பட இயக்குநர் கவிதா பாரதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனரும் தலைவருமான சா. அருணன் அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
எழுத்தாளர் இமையம் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். நாவல் ஆசிரியர் மு. து. பிரபாகரன் ஏற்புரை வழங்க த. பால்ராஜ் அவர்கள் நன்றியுரை அளிக்கிறார்.
Add your first comment to this post