தரைப்படை: பிரம்மாண்டமான விமான நிலைய செட்டில் படப்பிடிப்பு…

நகர்வு

Tharaippadai

ராம்பிரபா இயக்கத்தில் ஸ்டோனக்ஸ் நிறுவனத்திற்காக பி.பி. வேல்முருகன் தயாரித்துள்ள படம் தரைப்படை.

ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்களாம்.

இது ஒரு கேங்ஸ்டர் கதை என்கிறார்கள். அதாவது, ரௌடி கும்பலின் கதைசொல்லும் படம்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை ஏமாற்றி அபகரிக்கிறது. கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றி என்ன செய்கிறது என்பதுதான் கதை எனத்தெரிகிறது.

தரைப்படை படத்துக்காக பிரம்மாண்டமாக ஒரு விமான நிலையத்தை அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறதாம். கலை இயக்குநர் ரவீந்திரன் இந்த அரங்கை மிகநேர்த்தியாக அமைத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

படத்தின் முக்கியமான பல காட்சிகள் அதில் படமாக்கப்பட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page